search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடந்தொரை"

    • அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
    • பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.

    ஊட்டி,

    கூடலூர் அடுத்துள்ள பாடந்தொரையில், மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை தாங்கி அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளித்தாா். முகாமில் தாசில்தார் சித்தராஜ், கூடலூா் டி.எஸ்.பி,.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.தேவா்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகிம், தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு பொதுமக்கள் உள்பட பலா் முகாமில் கலந்து கொண்டனா்.

    ×