search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுநீதி நாள் முகாம்"

    • கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
    • 9 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் இன்னிசைக் கச்சேரி மேடையில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி 219 பயனாளிகளுக்கு ரூ. 13லட்சத்து 38ஆயிரத்து மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    மேலும் 9 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 3 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

    முகாமிற்கு கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ., ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு வரவேற்று பேசினார்.

    ஊட்டச்சத்து, கால்நடைத்துறை உள்பட பல்வேறு கண்காட்சிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

    இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மகாதேவன், மாறன், செந்தில்குமார், தனி தாசில்தார் செந்தில்குமார், படவேடு ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் சிவஞானம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரை ச்செல்விஆனந்தன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மனுநீதி நாள் முகாம் 7-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
    • மனுநீதி நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    மதுரை

    மதுரையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் நேரில் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கைக்கு கலெக்டர் ஆவண செய்வார். இதனால் திங்கட்கிழமை நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    இந்தநிலையில் ''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' என்ற திட்டத்தின் கீழ் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வு செய்கிறார். அதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் நிர்வாக பணிகள், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும், செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்தும் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் 6-ந்தேதி திங்கட்கிழமை ஆகும். அன்றைய தினம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோ சனை நடத்த உள்ளார்.

    எனவே கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் மனு நீதி நாள் முகாம் வருகிற 6-ந்தேதி வழக்கம்போல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் 6-ந்தேதி நடக்கவிருந்த மனுநீதிநாள் முகாம் மறுநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 6-ந்தேதி நடப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம், அடுத்த நாள் (7-ந்தேதி) நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

    • அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
    • பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.

    ஊட்டி,

    கூடலூர் அடுத்துள்ள பாடந்தொரையில், மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை தாங்கி அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளித்தாா். முகாமில் தாசில்தார் சித்தராஜ், கூடலூா் டி.எஸ்.பி,.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.தேவா்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகிம், தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு பொதுமக்கள் உள்பட பலா் முகாமில் கலந்து கொண்டனா்.

    • விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னிட்டு கடந்த மாதம் 27-ந்தேதி விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய 52 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 29 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    முகாமிற்கு சங்கரன்கோவில் சப் -கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார் வரவேற்று பேசினார்.

    முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகை 9 பயனாளிகளுக்கும், முதி யோர் உதவி தொகை 14 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 6 பேருக்கும் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு சங்கரன்கோவில் சப்-கலெக்டர் சுப்புலட்சுமி, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு பனை மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக தலா 50 பனை விதைகளும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கவாத்து செய்யும் கருவியும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணைத் தாசில்தார் சிவப்பிரகாசம், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் திட்ட பிரிவு ஆணையாளர் ஜெயராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சமூக பாதுகாப்பு திட்ட உதவியாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கர வடிவு, தேவி சத்யா, வேளாண்மை அலுவலர் கவுசல்யா, உதவி அலுவலர் கிருஷ்ண சங்கீதா, தோட்டக்கலைத்துறை சார்பாக உதவி இயக்குனர் ராஜா, விவேகானந்தன், முனீஸ்வரன், குணா, ஒன்றிய கவுன்சிலர்கள் கனகராஜ், முனியராஜ், கிப்சன், விக்னேஷ் ராஜா, மணிகண்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேப்டன் கேசவேலு, துணைதலைவர் சாந்திமகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.இ.தியாகராஜன், எஸ். இந்திராகாந்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.ஜே.பத்ரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்ட வழங்கல் அலுவலர் தேவி அனைவரையும் வரவேற்றார். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், வேளாண் உதவி இயக்குனர் உமா சங்கர உள்ளிட்ட அதிகாரிகள் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.

    குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்க ட்ராமன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு 32 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் 109 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, வேளான் உபகரணங்கள், விதைகள் தொகுப்பு வீடுகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், திமுக பிரமுகர்கள் ஆனந்தன், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் நன்றி கூறினார்.

    • 87 பேருக்கு நலத்திட்ட உதவி
    • கலெக்டர் வழங்கினார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சேங்குன்றம் கிராமத்தில் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது.

    இம் முகாமிற்கு தாசில்தார்கள் நெடுமாறன், கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் கவுரப்பன், ஊராட்சி மன்ற தலைவர் குமரன், துணைத் தலைவர் ஹேமலதாதியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாசில்தார் லலிதா வரவேற்றார்.

    குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் புண்ணியகோட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு மனு நீதி நாள் முகாமிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி 87 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, நில பட்டா, வாரிசு சான்று சலவைப் பெட்டிகள், தையல் எந்திரங்கள், விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் கருவிகள், விதைகள், மாற்றுத்திறனாளி களுக்கான 3 சக்கர வாகனம் என ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ஸ்டீபன் ஜெயக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கோமதி, மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முரளிதரன், வட்டார மருத்துவ அலுவலர் விமல் குமார், துணை தாசில்தார் சந்தர், வட்ட வழங்கல் அலுவலர் தேவி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் காந்தி நன்றி கூறினார்.

    ×