search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடி மக்கள்"

    • அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
    • கோதையாறு சாலையை சீரமைக்க பல முயற்சிகள் செய்தோம், சிக்கல்கள் உருவாகி கொண்டே இருக்கிறது.

    திருவட்டார் :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை கடம்பமூடு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) சங்கரலிங்கம் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது :-

    குமரி மாவட்டத்தில் 488 பழங்குடி குடும்பங்களுக்கு தற்போது பட்டா வழங்கும் வகையில், பரிசீலினை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களை கஷ்டத்திற்கு ஆளாக்ககூடாது என்று மாவட்டத்தில் தற்போது அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

    முன்பெல்லாம் குமரி மாவட்ட சாலைப் பணிகளுக்கு அதிக பட்சம் 40 முதல் 45 கோடி ரூபாய் தான் வரும். ஆனால் இப்போது ஆண்டுக்கு ரூ. 200 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் செய்யப்படுகிறது. கோதையாறு சாலையை சீரமைக்க பல முயற்சிகள் செய்தோம், ஆனாலும் சிக்கல்கள் உருவாகி கொண்டே இருக்கிறது.

    தற்போது வனத்துறை மூலமாகதான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் விஷயத்தில் மக்கள் யாரும் அதிருப்தி கொள்ள தேவையில்லை. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உங்களுக்கு நன்மை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் நன்றி கூறினார். மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், வன உரிமைக் குழு மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ்காணி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    பொன்மனை பேரு ராட்சிக்கு உட்பட்ட வண்ணாரங்கோடு பகுதியில் உள்ள இளைஞர்க ளின் கோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ நிதியில் இருந்து சுமார் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான்சன், பேருராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி, தி.மு.க. பேரூர் செய லாளர்கள் ஜெபித்ஜாஸ், சேம் பெனட் சதீஷ், ஜான், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஜே.எம்.ராஜா, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து திற்பரப்பு பேருராட்சிக்குட்பட்ட கோட்டூர் கோணம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டுவதற்க்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார். பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், தலைவர் பொன்.ரவி, வார்டு உறுப்பினர் மல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்மனை மற்றும் மனியன் குழி பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தையும் அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் அனஸ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் வினு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    • திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்தது முதலே அந்த கிராமங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
    • திரவுபதி முர்மு நிச்சயம் எங்கள் தேவைகளை தீர்த்து வைப்பார் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

    அரவேணு:

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுடன் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். நேற்று அவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

    திரவுபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மலை மாவட்டமான நீலகிரியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே கறிகியூர், மெட்டுக்கள், பாவியூர், அரக்கோடு தாளமுக்கை என 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின இருளர் கிராமங்கள் உள்ளன.

    திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்தது முதலே அந்த கிராமங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அவர்கள் கிராமங்களில் ஊர்வலமாகச் சென்று பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திரவுபதி முர்மு பதவியேற்பை முன்னிட்டு நேற்றும் பழங்குடியின மக்கள் முக்கிய இடங்களில் கூடி பாரம்பரிய இசையான அரக்கோன் இசைத்து நடனமாடி மகிழ்ந்தனர். திரவுபதி முர்முவை முன்னுதாரணமாக கொண்டு பழங்குடியினர் அனைவரும் வாழ்வில் முன்னேற்றப்பாதைக்கு செல்ல வேண்டும் என அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தங்களின் நிறைகுறைகளை அறிந்த ஒரு தலைவராக திரவுபதி முர்மு விளங்குகிறார், எனவே நிச்சயம் அவர் எங்கள் தேவைகளை தீர்த்து வைப்பார் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

    ×