search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகூடங்கள்"

    • விழிப்புணர்வு குறித்த குழுக்கள் ஏற்படுத்தி தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    • மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சென்ற மாதம் 15 விழிப்பணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது மற்றும் விழிப்புணர்வு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடை பெற்றது.

    அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் போதை பொருட்கள் விழிப்புணர்வு குறித்த குழுக்கள் ஏற்படுத்தி ஒவ்வொரு மாதமும் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், போதை பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்திடுமாறு கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப் பட்டது.

    மாவட்டத்தில் 490 பள்ளிக்கூடங்களில் இது தொடர்பான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. எஞ்சி யுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி கூடங்களில் போதை பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு குழுக்கள் மாணவர்களை கொண்டும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பா ளராகவும் நியமித்திடுமாறும் ஒவ்வொரு மாதமும் விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடத்துவது குறித்து திட்டமிடப்பட்ட அறிக்கையினை சமர்ப்பித்திடு மாறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டது. மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சென்ற மாதம் 15 விழிப்பணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரக பகுதி தொழிற்சாலைளில் மக்களிடையே போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து நடத்திடுமாறு சமூகநலத்துறை அலுவலருக்கு தெரிவிக்கப் பட்டது.

    ஊராட்சி, பேரூராட்சி அள வில் பொதுமக்களிடையேயும் விளிம்புநிலை மக்களிடையேயும் தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திட வேண்டும் என ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுயஉதவி குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்களின் உறை மீது போதை விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. கடற்கரை பகுதிகளிலும், விசை படகு களிலும் மீன்வளத்துறை, காவல்துறை மற்றும் கடலோர காவல் படையினர் திடீர் தணிக்கை மேற்கொள்ளு மாறும் அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் 19 மொத்த விற்பனை மருந்தகங்கள் மற்றும் 41 சில்லறை விற்பனை மருத்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அலுவரால் தணிக்கை செய்யப்பட்டதில் வடக்கு சர்ச் ரோடு முகவரியிலுள்ள ஒரு மெடிக்கல் கடையில் விதி மீறல் மருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மருந்துக்கள் மற்றும் ஒப்பனை சட்ட படி விதி மீறல் நோட்டீஸ் வழங்கப் பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களை சுற்றி அமைந்துள்ள கடைகளில் புகையிலை போன்ற அனுமதியில்லா பொருட்களை பறிமுதல் செய்த வகையில் 19 கடைகளுக்கு, ரூ.23,800/- சுகாதாரதுறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போலீசார் மூலம் போதை பொருட்கள் பயன்படுத்திய வகையில் 31 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலமும் சேவை வழங்குநர்களுடன் இணைந்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவு றுத்தப்பட்டது. பொதுமக்கள் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாடு ஏதேனும் கண்டறியப்பட்டால் அது குறித்து விபரங்களை 7010363173 தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த தகவல்களின் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட கலெக்டரால், தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட அளவிலான கூட்ட குழு உறுப்பினர்களான மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பி ரமணியம், பத்மனாபபுரம் சார்ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உசூர் மேலாளர் சுப்பிரமணியன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×