search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி சுற்றுச்சுவர்"

    • அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
    • நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழமட்டையான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியின் தெற்கு பக்கமுள்ள சுற்று சுவர் விரிசலடைந்து உள்ளதால் தற்காலிகமாக குத்துக்கல்லை சுவற்றை தாங்கி பிடிக்க நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவி கள் உயிர் அச்சத்தில் படித்து வருகின்ற சூழல் நிலவி வருகின்றது. மேலும் பள்ளி அருகில் உள்ள தெருவில் இதுவரை கழிவுநீர் வாய்கால் கட்டாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருவதால் தெருவில் நடுவே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவ தோடு பள்ளி வகுப்பறை சுவர்களின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமாகி உள்ளது.

    மேலும் இதன் அருகில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் உள்ள நிலையில் சேதமான சுற்று சுவரை இடித்து அப்புறப் படுத்தி மாணவர்களின் அச்சத்தை போக்க முன் வருவார்களா? என்றும் மேலும் கோவில் தெருவில் கழிவுநீர் வாயிக்கால் கட்ட சம்பத்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    • பள்ளியின் மேற்குபுறமாக உள்ள சுற்றுச்சுவர் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
    • பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் : 

    பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி (மேற்கு) செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் மேற்குபுறமாக உள்ள சுற்றுச்சுவர் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    வாகன போக்குவரத்து மிகுந்த கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுற்றுச் சுவர் பகுதி அமைந்து இருப்பதால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு, பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×