என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயன்பாட்டிற்கு வந்த சிக்னல்"
- நிலக்கோட்டை நால் ரோட்டில் சிக்னல் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- சிக்னலை நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தொடங்கி வைத்தார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோடு பகுதி நிலக்கோட்டை திண்டுக்கல் சாலை, மதுரை பெரியகுளம் சாலை, நிலக்கோட்டை அணைப்பட்டி சாலை ஆகிய 4 சாலைகளையும் இணைக்கும் பகுதியாகும்.
இந்த நால் ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது.
சில நேரங்களில் நால் ரோட்டில் வாகனங்கள் இடித்துக்கொண்டு விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை போக்கும் விதமாக நிலக்கோட்டை பகுதி விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் நிலக்கோட்டை நால் ரோட்டில் சிக்னல் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று தற்போது தமிழக அரசு நான்கு புறங்களிலும் சிக்னல் வைத்து பணியை தொடங்கியுள்ளது. இப்பணியை நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்