search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பப்ஸ்"

    • பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் இடங்கண சாலையை அடுத்த மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38), இவர் தனது குழந்தைகளான யாசினி (9), யாசித்(8), சபரீஷ் (3) ஆகிய 3 பேருடன் கொங்கணாபுரம் அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.

    அங்கு வழிபாடு செய்தவர் தனது குழந்தைகளுடன் மீண்டும் வீடு திரும்பிய நிலையில், கொங்கணாபுரம் பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து முட்டை பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில், திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த எடப்பாடி தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுரு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தின்பண்டங்களின் மாதிரிகளை சேகரித்ததுடன், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

    • உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கிரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் உள்ள பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கிரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேக்கிரி கடைக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×