search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனையேறும் எந்திரம்"

    • பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் விருது
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அர விந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறந்த பனையேறும் எந்திரத்தை கண்டு பிடிப்பவருக்கான விருது ரூ.1 லட்சம் வழங்கப் படஉள்ளது.

    பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி இல குவாக ஏறுவதற்கும், பனை நுங்கு மற்றும் பிற பொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்காகவும், கருவி களை கண்டுபிடிப்பதற் காக ஆராய்ச்சிகளை மேற் கொள்ளும் பல்கலை கழகங்கள், தனியார் நிறுவ னங்கள் மற்றும் முற்போக்கு மிக்க விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில், சிறந்த பனை யேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

    பனையேறும் இயந்தி ரத்தை கண்டுபிடிப்பதற்கா கும் மொத்த செலவு, விலையின் உண்மைத் தன்மை, இயந்திரத்தின் செயல் திறன் மற்றும் ஒட்டுமொத்த பயனளிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விருதானது தோட்டக்கலை பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்), வேளாண் பொறியியல் பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்), தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநிலத் திட்டம்), தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தால் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவ சாயி அடங்கிய குழுவின் மூலம் தேர்தெடுக்கப்பட்டு வழங்கப்படும்.

    பனையேறும் எந்திரத்தை கண்டுபிடிப்பவர்கள், இக்குழுவின் முன்னிலை யில் செயல் விளக்கம் அளிக்கவேண்டும். மேலும் தகவலுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×