search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ணையாளர்கள்"

    • பி.சி.சி. நிர்ணயம் செய்யும் முறையில் இருந்து கிலோவுக்கு 30 ரூபாய் குறைத்து பண்ணைகளில் கோழிகளை பிடிக்கின்றனர்.
    • கோழி பண்ணை தொழிலை காப்பாற்ற தமிழக அரசு நிர்ணயம் செய்து தர வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்பட பல பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்பட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கையாக உள்ளது.

    அதன்படி கடந்த 1-ந் தேதி கொள்முதல் விலை ஒரு கிலோ 92 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. 5-ந் தேதி 84 ரூபாய், 20-ந் தேதி 89 ரூபாய் என ஏற்றம் இறக்கம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கறிக்கொழி விலை 12 ரூபாய் சரிந்து 77 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    ஒரே நாளில் 12 ரூபாய் விலை குறைந்தது பண்ணையாளர்கள் மத்தியில் கவலை அடைய செய்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    பி.சி.சி. நிர்ணயம் செய்யும் முறையில் இருந்து கிலோவுக்கு 30 ரூபாய் குறைத்து பண்ணைகளில் கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் தினமும் ரூ.11 கோடி வீதம் வாரம் ரூ.27 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஒரு கிலோ கோழி உற்பத்தி செய்வதற்கு 90 முதல் 100 ரூபாய் செலவாகிறது.

    உற்பத்தி செலவுடன் குறைத்து விற்பனை செய்வதால் பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கொள்முதல் விலையில் இருந்து சராசரியாக 10 ரூபாய் குறைத்தே கோழிகளை வாங்குகின்றனர்.

    இந்த மாதம் மட்டும் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோழி பண்ணை தொழிலை காப்பாற்ற தமிழக அரசு நிர்ணயம் செய்து தர வேண்டும். பண்ணியாளர்களை அழைத்து பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×