search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ணாரி மாரியம்மன் கோவிலில்"

    • உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • ரூ.42 லட்சத்து 35 ஆயிரம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோ வில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 21 உண்டியல்கள் வைக்கப் பட்டு உள்ளன.

    கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டிய ல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ண ப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    கோவில் செயல் அலுவ லர் மேகனா, பவானி சங்க மேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுவாமி நாதன், சத்தியமங்கலம் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவ மணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    இந்த பணியில் வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் ரொக்க பணமாக ரூ.42 லட்சத்து 35 ஆயிரத்து 150-ஐ காணிக்கையாக உண்டியலில் பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 103 கிராம் தங்கம், 290 கிராம் வெள்ளி ஆகிய வற்றையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    ×