search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிடம்"

    • 4 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    • உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் சிவகுமார் கரூர் வட்டாட்சியராகவும், அங்கிருந்த பன்னீர் செல்வம் இந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் அலுவலக தனி வட்டாட்சியராவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் கரூர் உதவி ஆணையர் அலுவலக தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன் குளித்தலை சமூக பாதுகாப்பு திட்டதனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த கலியமூர்த்தி குளித்தலை வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்ட செய்தி-மக்கள்தொடர் துறையில் 2 வேன் கிளீனர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மொத்தம் 119 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள்தொடர் துறையில் 2 வாகன சீராளர் பணியிடம் காலியாக உள்ளது.

    ஆண், பெண் இருபாலர் என மொத்தம் 119 பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் வகுப்புதேர்ச்சி பெற்று எஸ்.சி., (முன்னுரிமையற்றவர்) 18 முதல் 37 வயதும், பி.சி., (முன்னுரிமை பெற்றவர்) 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேர்முகதேர்வு நடந்தது. தேசிய நெடுஞ்சாலைதுறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி இயக்குனர் சத்தியசீலன் முன்னிலை வகித்தனர்.

    பி.ஆர்.ஓ., நவீன்பாண்டியன், ஏ.பி.ஆர்.ஓ., வினோத் விண்ணப்பதாரர்களின் கல்விதகுதி, ஆதார் அட்டை, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

    எம்.எஸ்.சி., பி.இ., மெக்கானிக் படித்த டிப்ளமோ, பட்டதாரிகள் பலர் பங்கேற்றனர்.

    ×