search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிஓய்வு"

    • டபேதாரை கௌரவப்படுத்திய கலெக்டர்
    • புதுக்கோட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு டபேதாராக இருந்தவர் அன்பழகன். இவர் மாவட்ட கலெக்டர்கள் உமா மகேஸ்வரி மற்றும் தற்போது செயல்பட்டு வரும் கவிதா ராமு ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்பழகனை மாவட்ட கலெக்டர் தனது காரில், அவர் அமர்ந்து செல்லும் இடத்தில் அன்பழகனை அமர வைத்து அவர் வீடு உள்ள அடப்பன் வயல் ஒன்றாம் வீதியில் உடன் சென்று வீட்டில் இறக்கி விட்டு அதன் பின்னர் வீட்டில நடைப்பெற்ற விருந்தில் கலந்துக் கொண்டார். அப்போது அன்பழகனுக்கு பரிசுகள் வழங்கி அவரை கௌரவப்படுத்தினார். அன்பழகன் ஓய்வு பெற்றதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் தனது காரில் கொண்டு சென்று வீட்டில் விட்டதை புதுக்கோட்டை மக்கள் வெகுவாக பாராட்டினர். 

    ×