search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பொருட்கள் கொள்ளை"

    தொழிலாளர்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.டி.சி.நகர் அருகே உள்ள ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் (வயது 63) ஓய்வு பெற்ற தொழிலாளர்துறை இன்ஸ்பெக்டர். இவரது மனைவி டல்பி எலிசபெத். ஓய்வு பெற்ற பேராசிரியை. 

    இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் தங்களது மகளை பார்ப்பதற்காக சென்னை சென்றனர். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த கேமிரா, வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 1 ½ லட்சம் ஆகும். 

    இது குறித்து ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் சிப்காட் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வாக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×