என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "retired inspector"
தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.டி.சி.நகர் அருகே உள்ள ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் (வயது 63) ஓய்வு பெற்ற தொழிலாளர்துறை இன்ஸ்பெக்டர். இவரது மனைவி டல்பி எலிசபெத். ஓய்வு பெற்ற பேராசிரியை.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் தங்களது மகளை பார்ப்பதற்காக சென்னை சென்றனர். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த கேமிரா, வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 1 ½ லட்சம் ஆகும்.
இது குறித்து ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் சிப்காட் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வாக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்