search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணமோசடி செய்தவர் மீது வழக்கு"

    • பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக வீடு கட்டி தராமல் காண்டிராக்டர் ஏமாற்றியதோடு கொலை மிரட்டல் விடுத்தார்.
    • பெரியகுளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் காஜா ஜியாவுதீன்(55). இவர் ஆட்ேடா ஓட்டி வருகிறார். பெரியகுளம் முருகமலை நகர் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் வீடு கட்டுவதற்கு நிலம் வாங்கியிருந்தார்.

    அதனை கட்டி தருமாறு காண்டிராக்டரான சிவராமலிங்கத்திடம் தெரிவித்தார். இதற்காக ரூ.6லட்சத்து 40 ஆயிரம் பணம் காஜா ெகாடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக வீடு கட்டி தராமல் சிவராமலிங்கம் ஏமாற்றி வந்துள்ளார்.

    இதுகுறித்து கேட்டபோது தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெரியகுளம் போலீசில் காஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×