search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டுகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.
    • கைத்தறி ரகங்களை விசைத்துறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வழக்கறுத் தீஸ்வரர் கோவில் தெருவில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் புதிய விற்பனை நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

    இதனை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது-

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுகள் தான் உண்மையான கைத்தறி பட்டுகள். இந்த பட்டுக்களில் தான் தங்கத்தின் அளவு, வெள்ளி அளவு ஆகியவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி நஷ்டத்தில் இயங்கியது. தற்போது அதில் ரூ.9 கோடி லாபம் கொண்டு வந்துள்ளோம். கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. ரூ.150 கோடியாக இருந்த விற்பனையை ரூ.200 கோடியாக உயர்த்தினோம். இந்த ஆண்டு ரூ.400 கோடி இலக்கு வைத்துள்ளோம். இதை நாங்கள் ரூ.1000 கோடியாக அதிகரிப்போம்.

    காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவில் விற்பனை ரூ.10 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக அதிகரித்துள்ளது. நலிவடைந்த சங்கங்களுக்கு முதலீடுகள் கொடுத்து தொடர்ந்து அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

    கைத்தறி ரகங்களை விசைத்துறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு உண்மையான பட்டு எது? என்று தெரியவில்லை. இதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போலி பட்டுகள் குறித்த விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அனைத்து கூட்டுறவு கடைகளிலும், இதுகுறித்து தகவல்கள் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×