search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகுகள் சிறைபிடிப்பு"

    • தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
    • 86 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்து தூத்துக்குடி துறைமுக பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளைகுடா பகுதியில் தங்கி மீன்பிடித்து வருவதை கண்டித்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி ஆழ்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரளாவை சேர்ந்த ஒரு படகு மற்றும் குளச்சலை சேர்ந்த 5 படகு உட்பட 6 படகுகளையும், அதில் இருந்த 86 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறை பிடித்து தூத்துக்குடி துறைமுக பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

    மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் சிறைபிடிப்பு சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×