என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "படகு விபத்து"
- ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
- இச்சம்பவம் பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் பயணித்தபோது அந்தப் படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
விசாரணையில், அதிக அளவிலான மக்களை படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.
திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம், மர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பைரவ் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஹரிஹர்புரா எனும் இடத்தில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் விரிந்தபன்பூர் நோக்கி 2 படகுகள் இன்று இரவு 7 மணியளவில் சென்றது. அப்போது கரிப்பூர் எனும் இடத்தில் ஒரு படகு தண்ணீரில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட நீதிபதி பி.உலகநாதன் அப்பகுதிக்கு சென்று விபத்து நிகழ்ந்த இடத்தில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ படகு கவிழத்தொடங்கியதும் அதில் இருந்த பலர் கரையை நோக்கி தண்ணீரில் நீந்தி பாதுகாப்பாக வந்துவிட்டனர். ஆனாலும், படகில் பயணம் செய்த 7 பேர் பற்றிய தகவல் இல்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள தேவையான லைட் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்