search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசும்பொன்"

    • பசும்பொன் அருகே கோழிக்கடை சூறையாடப்பட்டது.
    • கமுதி போலீசில் புகார் செய்தார்.

    பசும்பொன்

    பசும்பொன் அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் திருக்கண் (வயது44). இவர் கண்ணார்பட்டியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான் மகன் ரமேஷ் (29) கோழிக்கறியை கடனாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு திருக்கன் பழைய பாக்கி உள்ளதால் கடன் தர முடியாது என மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கண் கமுதி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளதாக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    சிறு மோதல் சம்பவம் கூட நடந்திராத வண்ணம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாகவும், இந்த சாதனையின் மூலம், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என்றும், பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளதாகவும், போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.

    • இன்று காலை தேவர் நினைவிடத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன.
    • குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நேற்று (28-ந் தேதி) தொடங்கி நாளை (30-ந் தேதி) வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாகவும், நாளை குரு பூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    முதல் நாளான நேற்று தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டிருந்தது.

    தேவர் நினைவிடத்தில் உள்ள விநாயகர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு 22 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ. க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து தேவர் நினைவிட நிர்வாக பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, சத்தியமூர்த்தி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் நடந்தது.

    இரவு 8 மணி அளவில் முத்துராமலிங்க தேவரின் ஐம்பொன் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பாக சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை தேவர் நினைவிடத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு செய்தனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை விழா நாளை (30-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    அவர்கள் எந்தெந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என போலீசார் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும் என்று போலீசார் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

    குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×