search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசலைக்கீரை தொக்கு"

    • உடல் எடை குறைப்பவர்களுக்கு பசலக்கீரை ஒரு வரப்பிரசாதமாகும்.
    • தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

    உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதமாகும். காரணம், இதிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

    பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது. நிறைய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு, இந்த கீரைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகின்றன. மேலும், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

    மேலும், உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுத்து நிறுத்துகின்றன.. எனவே, டயட் இருப்பவர்கள், வாரம் 2 முறையாவது, சேர்த்து இந்த கீரையை, உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பாலக்கீரையை பயன்படுத்தி ஆந்திரா ஸ்பெஷல் உல்லிக்காரம் செய்து பார்க்கலாம். இதனை சூடான சாதத்திலும், சப்பாத்திக்கு கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

     தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை- ஒரு கட்டு

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    பூண்டு- 20 பல்

    வெங்காயம்- 2

    உப்பு- தேவையான அளவு

    சீரகம்- கால் டீஸ்பூன்

    காய்ந்தமிளகாய்- தாளிக்க

    கடுகு- கால் டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் பசக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் தாளிக்க வேண்டும். அது பொறிந்ததும் காய்ந்தமிளகாய், பூண்டு. கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை அதில் சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு மசாலாவில் வெட்டி வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து நன்றாக மசாலா வாசனை போகும் வரையிலும், எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பாலக்கீரை உல்லிக்காரம் தயார். சூடான சாதத்தில் இதனை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அதுதாங்க அமிர்தம்.

    ×