search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் எதிர்ப்பு"

    • கோவில் உண்டியலுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
    • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்கு வாதம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில், சோளிங்கர் சாலையில் பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாலாஜா. மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் அமுதா தலைமையில் கோவிலுக்கு வந்த அதிகாரிகள் கோவில் உண்டியலுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.

    இது பற்றி தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர்,பல்வேறு அரசியல் கட்சியினர், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

    பக்தர்கள் சிலர் கோவிலில் உண்டியல் இருப்பது தான் பிரச்சனை என்றால் அதனை அகற்றி விடுகிறோம் என கூறி சிமெண்டால் கட்டப்பட்டிருந்த உண்டியல் மேடையை இடித்து அகற்றினர்.

    கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கோவில் முன்பாக பக்தர்கள் கோஷமிட்டதாலும், பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்கவே அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவில் அருகில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மானாமதுரையில் மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மாரியம்மன் கோவில் அமைக்கப்பட்டது. 18,20,26,27-வது வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் இந்த கோவிலை வழிபட்டு வருகின்றனர்.

    ஆடி, பங்குனி முளைப் பாரி உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இரவு நேரங்களில் கோவில் வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அத்துமீறுவதால் இந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினர்.

    தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறை நிர்வாகம் இந்த பகுதியில் நில அளவீடு செய்தது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-

    பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து திரு விழாக்கள் நடைபெறுகிறது. சுற்றுச்சுவர் அமைக்காமல் இருந்தபோது சமூக விரோதிகள் கோவி லுக்குள் அத்துமீறியதால் கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கோவிலின் புனித தன்மை பாது காக்கப்படுகிறது. கோவி லுக்கு பாதுகாப்பாக உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்றக்கூடாது என வலியுறுத்தி கலெக் மரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×