என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பகுதிநேர வேலை"
- பகுதிநேர பணியில் சேர பாதிக்கப்பட்ட பெண் முடிவு செய்தார்.
- பெண்ணின் வங்கி கணக்கிற்கு அந்த நிறுவனம் சார்பில் பணம் அனுப்பப்பட்டது.
பெண் ஒருவரிடம் பார்ட் டைம் வேலை மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறி ரூ. 4 லட்சம் ஏமாற்றிய குற்றத்தில் மும்பை போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜ்மீரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 97 லட்சம் பறிமுதல் செய்தனர்.
ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு கடந்த மாதம் வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பகுதிநேர வேலை குறித்த தகவல்கள் இடம்பெற்று இருந்தது. பகுதிநேர பணியில் சேர பாதிக்கப்பட்ட பெண் முடிவு செய்தார். அதன்படி பகுதிநேர பணியில் சேர அந்த நிறுவனத்தின் டெலிகிராம் க்ரூப்-இல் இணைய வலியுறுத்தப்பட்டார். இதை அடுத்து பெண் டெலிகிராம் க்ரூப்-இல் சேர்ந்தார்.
பின் அந்த நிறுவனம் பெண்ணிற்கு யூடியூப் லின்க் அனுப்பி, அதன் வீடியோவை லைக் செய்ய கூறி இருக்கிறது. இதுபோன்ற பணிகளை செய்ததற்காக பெண்ணின் வங்கி கணக்கிற்கு அந்த நிறுவனம் சார்பில் பணம் அனுப்பப்பட்டது. இதேபோன்று பெண்ணை நம்ப வைத்த நிறுவனம், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி ரூ. 4 லட்சத்து 32 ஆயிரம் வரை முதலீடு செய்ய கூறி இருக்கிறது.
இவரும் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் முதலீடு செய்திருக்கிறார். இவர் எதிர்பார்த்ததை போன்று அவரின் முதலீட்டுக்கு எவ்வித பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த பெண் சுனாபட்டி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். இவரது புகாரை அடுத்து காவல் துறை விசாரணையை துவங்கியது.
புகாரில் பெண் அளித்த விவரங்களை கொண்டு நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 43 ஏடிஎம் கார்டுகள், 25 காசோலை புத்தகங்கள், 32 சிம் கார்டுகள், 22 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பெங்களூருவில் நிறுவனம் தொடங்கி சீன கும்பல் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
- விளம்பரத்தை கண்டு ஏமாந்தவர்கள் அமலாக்கத் துறையில் புகார் அளித்தனர்.
புதுடெல்லி:
சமீபத்தில் செல்போன் செயலி மூலம் சிறிய தொகையை உடனடி கடனாக கொடுத்து பொது மக்களிடம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பணம் கட்டினால் பகுதி நேர வேலைவாய்ப்பு என விளம்பரம் செய்ததில் பணம் கட்டியவர்களை வேலையில் சேர்த்து மோசடி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கீப்ஷேரர் செயலி உருவாக்கி கும்பல் ஒன்று பணம் பறித்துள்ளது.
கீப்ஷேரர் செயலி மூலம் பெங்களூருவில் 12 இடங்களில் நிறுவனம் தொடங்கிய கும்பல் திடீரென பிளே ஸ்டோரில் இருந்து செயலி நீக்கப்பட்டதால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விளம்பரத்தை கண்டு ஏமாந்தவர்கள் அமலாக்கத் துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பெங்களூருவில் நிறுவனம் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தது சீன கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்