search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகவத் கிஷன் ராவ் கராத்"

    • கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் .
    • கூட்டாலு மூட்டில் வாக்காளர்களிடம் கலந்துரையாடுகிறார்.

    நாகர்கோவில்:

    பாரதிய ஜனதா கட்சி 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    இதையடுத்து தமிழகத்தில் தொகுதி வாரியாக பொறு ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதி பொறுப்பாளராக மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.இன்று நாகர்கோவிலில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் கலந்து கொண்டு பேசினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு,இளைஞரணி, ஊடகப்பிரிவு, தரகு தளம் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொ ண்டார். இதை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம். ஆர் காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மகளிர் தலைவி உமாரதி, பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன்.பால கணபதி, தொகுதி பொறுப்பாளர் ராஜ கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாளை காலை 10 மணிக்கு மத்திய அரசின் திட்டப்பணிகளை பார்வை யிடுகிறார்.கோட்டார் ரயில் நிலையம் ஆளூர் பகுதியில் நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட்டு நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் ஆய்வு செய்கிறார். மதியம் கூட்டாலு மூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் .

    மாலை 3 மணிக்கு கூட்டாலு மூட்டில் வாக்கா ளர்களிடம் கலந்துரை யாடுகிறார்.

    ×