search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி"

    • 2 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே உள்ள இடையநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சம்பன்னி பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயில் புரனமைக்கப்பட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து நேற்று விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக கோயில் வளாகத்தில், சம்பன்னி பீரேஸ்வரர், ஈரம்மா, ராமாதேவரு, வீரபத்திர சாமி, சிக்கம்மா, தொட்டம்மா உள்ளிட்ட கிராம தெய்வங்கள்

    மேள,தாளம் முழங்க தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலை மீது தேங்காய் உடைக்கும் இடத்தின் அருகே அனைத்து தெய்வங்களும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    பின்னர் பக்தர்கள் தலை மீதுதேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த விழாவில் ஓசூர்,தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பெங்களூரு, சர்ஜாபுரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குருபர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே அரசனட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஹரியம்மா, ஸ்ரீ கரியம்மா, ஸ்ரீ ஆனகோண்ட்லம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷேக விழா, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, கோயில் கமிட்டி மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக, சம்பன்னி சாமி, அஜ்ஜய்யா சாமி, ஆனேலிங்கேஷ்வரா சாமி, அகதூர் சாமி, முகலூரு வீரபத்திர சாமி, ஒசராய சாமி, சித்தேஸ்வர சாமி, சிக்கம்மா தொட்டம்மா தேவிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் சிலைகள் மேள, தாள முழக்கத்துடன், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்னே செல்ல, சாமி சிலைகள் ஊர்வலமாக அருகில் உள்ள மைதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலை மீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.

    இதில், ஓசூர், சூளகிரி பகுதிகளிலிருந்தும், பெங்களூரு பகுதியிலி ருந்தும் திரளான குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கமிட்டி தலைவர் காந்தராஜ், செயலாளர் மாதேஷ் என்கிற மகாதேவன் , மல்லிகா ,வீரபத்திரப்பா, வெங்கடேஷ் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×