search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே கோவில் விழாவையொட்டி  பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி
    X

    ஓசூர் அருகே கோவில் விழாவையொட்டி பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி

    • 2 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே உள்ள இடையநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சம்பன்னி பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயில் புரனமைக்கப்பட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து நேற்று விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக கோயில் வளாகத்தில், சம்பன்னி பீரேஸ்வரர், ஈரம்மா, ராமாதேவரு, வீரபத்திர சாமி, சிக்கம்மா, தொட்டம்மா உள்ளிட்ட கிராம தெய்வங்கள்

    மேள,தாளம் முழங்க தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலை மீது தேங்காய் உடைக்கும் இடத்தின் அருகே அனைத்து தெய்வங்களும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    பின்னர் பக்தர்கள் தலை மீதுதேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த விழாவில் ஓசூர்,தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பெங்களூரு, சர்ஜாபுரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குருபர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×