search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்காணல்"

    • திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகையில் கருவூல பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஓய்வூதியர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடப்பு ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகையில் கருவூல பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட கருவூலம்: ராயபுரத்தில் உள்ள ஜெய்வாபாய் பள்ளியில் ஜூலை 1, 12,21 மற்றும் ஆகஸ்டு 1,11,24 தேதிகள். தேவாங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 4, 13, 22, ஆகஸ்டு 2,12, 25 தேதிகள். அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளியில், ஜூலை 5, 14, 25, ஆகஸ்டு 3,16, 26. கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் பள்ளியில்ஜூலை 6,15,26, ஆகஸ்டு 4,17, 29 தேதிகள்.

    மண்ணரை மனவளக்கலை மன்றத்தில் ஜூலை 7,18, 27, ஆகஸ்டு 5,18, 30. பெரிச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 8, 19,29, ஆகஸ்டு 8,22,மங்கலம் ரோடு கருவம்பாளையம் அரசு நடுநிலைப்பளியில் ஜூலை 11,20,29, ஆகஸ்டு 10,23ந் தேதிகள்.

    அவிநாசியில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில்ஜூலை 1,12, 21, ஆகஸ்டு 1,11,24ந் தேதிகள். ஓய்வூதிய ஆசிரியர் கூட்டமைப்பு அலுவலகத்தில் ஜூலை 4,13,22, ஆகஸ்டு 2,12,25 தேதிகள்.அன்னூரில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில் ஜூலை 7, 18ந் தேதிகள். சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 8, 19, கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 14, 27, குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூலை 15, 28ந்தேதிகளில் முகாம் நடக்கிறது.

    பல்லடம் சார் நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு, ஜூலை 1,4,5,6,8,12,14,18,20,22,25,27,29 தேதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஜூலை 7,15,26,28 தேதிகளில் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், அரசு மேல்நிலைப்பள்ளியில்ஜூலை 11,19 தேதிகளில் நடக்கிறது. சுல்தான்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் ஜூலை 13,21 தேதிகளில் நடைபெறும்.

    திருப்பூர் சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு திருப்பூர் குமரன் வணிக வளாகம் அருகில் ஜூலை 1 முதல் 7 மற்றும் 11,12 தேதிகள், நஞ்சப்பா பள்ளியில் ஆகஸ்டு 1 முதல் 5-ந் தேதி, கணக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 10 முதல் 12ந்தேதி,

    சூலூரில் செப்டம்பர் 1,2 தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை முகாம் நடைபெறும். நேர்காணலுக்கு வரும்போது, ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, மொபைல் உள்ளிட்டவற்றை உடன் எடுத்துவரவேண்டும். முகாமில் பங்கேற்போர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • அரசு இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம்.
    • www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெற இந்திய தபால்துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அரசு இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம். ஓய்வூதியர் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்ய ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூலமுகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள், ஆதார் எண், பி.பி.ஓ.எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் படிவத்தை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் வாழ்நாள் சான்றை www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையின் மேலாளர் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×