search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேருக்கு நேர் மோதி கொண்டன."

    • பைக்குகள் மோதல்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தா மோட்டூர் பகுதியை சேர்ந்த வர் அர்ஜுனன் (வயது 67). இவர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற் சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை திருவலத்தில் இருந்து பெல் நோக்கி எம்.பி.டி. சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காலிவார்த்தாங்கல் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் பைக்கில் வந்து கொண்டி ருந்தார். பெல் நரசிங்கபுரம் அருகே வந்தபோது அர்ஜு னன் ஓட்டி வந்த பைக்குகளும், நந்தகுமார் ஓட்டி வந்தபைக்குகளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் பலத்த காயமடைந்த அர்ஜுனன் வாலாஜா அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிப் காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×