search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "face to face"

    • தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா. மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும்.

    தாரமங்கலம்:

    மேச்சேரி அருகிலுள்ள தெதித்திகிரிபட்டி பகு தியைசேர்ந்தவர் சின்னு என்பவரின் மனைவி பாப்பா (வயது 45) இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் மணிகண்டன் தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்த போது கருக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எதிரே வந்த திருச்சி சமயபுரம் பகுதியைசேர்ந்த டவர் வேலை செய்யும் தொழி லாளி கிரிதரன் (26) என்ப வரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா.

    மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும். கிரி தரன் சேலம் அரசு மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பாப்பா கொடுத்து வாக்கு மூலத்தின் படி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    மேச்சேரி அருகிலுள்ள தெதித்திகிரிபட்டி பகு தியைசேர்ந்தவர் சின்னு என்பவரின் மனைவி பாப்பா (வயது 45) இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் மணிகண்டன் தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்த போது கருக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எதிரே வந்த திருச்சி சமயபுரம் பகுதியைசேர்ந்த டவர் வேலை செய்யும் தொழி லாளி கிரிதரன் (26) என்ப வரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா.

    மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும். கிரி தரன் சேலம் அரசு மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பாப்பா கொடுத்து வாக்கு மூலத்தின் படி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பைக்குகள் மோதல்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தா மோட்டூர் பகுதியை சேர்ந்த வர் அர்ஜுனன் (வயது 67). இவர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற் சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை திருவலத்தில் இருந்து பெல் நோக்கி எம்.பி.டி. சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காலிவார்த்தாங்கல் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் பைக்கில் வந்து கொண்டி ருந்தார். பெல் நரசிங்கபுரம் அருகே வந்தபோது அர்ஜு னன் ஓட்டி வந்த பைக்குகளும், நந்தகுமார் ஓட்டி வந்தபைக்குகளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் பலத்த காயமடைந்த அர்ஜுனன் வாலாஜா அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிப் காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(60) பால் வியாபாரி.
    • நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(60) பால் வியாபாரி. இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு காரைக்கால் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடித்து விட்டு காரைக்கால் பஸ் நிறுத்தம் அருகே நாமக்கலில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கந்தசாமி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவர் மீது மோதிய மோட்டார்சைக்கிளில் வந்த

    2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீசார் கந்தசாமியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பரமத்தி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு வான்பகுதியில் 2 விமானங்கள் நேருக்குநேர் வந்தது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சுமார் 330 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    பெங்களூரு:

    இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 10-ந் தேதி கோவையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து கொச்சி நோக்கி மற்றொரு இண்டிகோ விமானம் புறப்பட்டது. ஐதராபாத் விமானத்தில் 162 பயணிகளும், கொச்சி விமானத்தில் 166 பேருமாக சுமார் 330 பயணிகள் இருந்தனர்.

    இந்த 2 விமானங்களும் பெங்களூரு வான்பரப்பில் எதிரெதிரே வந்து கொண்டிருந்தன. இதில் ஒரு விமானம் 27,500 அடி உயரத்திலும், மற்றொன்று 27,300 அடி உயரத்திலுமாக வேகமாக சென்று கொண்டிருந்தன. இதனால் இரு விமானங்களுக்கும் இடையிலான உயரம் வெறும் 200 அடியாக இருந்தது.

    இரு விமானங்களுக்கும் இடையே 4 நாட்டிக்கல் மைல் தொலைவு இருந்தபோது, அங்கே பெரும் விபத்து நிகழ இருப்பதை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் கட்டுப்பாட்டு அறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே அவர்கள் துரிதமாக செயல்பட்டு 2 விமானங்களின் விமானிகளுக்கும் தகவல் அனுப்பினர். அதன்படி ஐதராபாத் செல்லும் விமானத்தை 36,000 அடிக்கு மேலே எழுப்புமாறும், கொச்சி விமானத்தை 28,000 அடியில் இயக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி இரு விமானிகளும், விமானத்தின் பாதையை மாற்றி அமைத்தனர். இதனால் கடைசி நேரத்தில் இரு விமானங்களும் மோதிக்கொள்ளுவது தவிர்க்கப்பட்டதுடன், சுமார் 330 பயணிகளின் உயிரும் அதிர்ஷ்டவசமாக காக்கப்பட்டது.

    பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள இண்டிகோ நிறுவனம், இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிவித்தது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 
    ×