search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கடலை சாகுபடி"

    • இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தற்போது தயாராகி வருகிறார்கள்.
    • விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது

    முத்தூர் : 

    தமிழ்நாடு அரசு விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், பரஞ்சேர்வழி, மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து கால்வாய் வழியாக ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி எண்ணெய் வித்து பயிர், நஞ்சை சம்பா நெல் மற்றும் காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த பகுதி விவசாயிகள் எதிர்வரும் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தற்போது தயாராகி வருகிறார்கள். இதன்படி இப்பகுதி விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது ஆகும். எனவே இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை பருப்புகள் சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது

    இதன்படி இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் தரக்கூடிய நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும் இப்பகுதி விவசாயிகள் எதிர்வரும் கார்த்திகை மாத பட்டத்தில் தங்கள் வாங்கி விதைக்கும் நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத்திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலக்கடலை பயிரிடப்பட்ட பகுதிகளில் கருகும் நிலையில் இருந்த செடிகள் மீண்டும் உயிர் பெற்று செழித்து வளர்ந்து காணப்பட்டது.
    • இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி விதைப்பில் முழு ஈடுபாட்டுடன் விதைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், கல்லாவி, சந்தூர். ஆனந்தூர், ஓலைப்பட்டி கொடமாண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஆண்டு தோறும் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகின்றனர். இந்த நிலக்கடலை பயிரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டில் பொருத்தமான மழை இல்லாததால் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகள் அனைத்தும் வாடி, வதங்கி கருகும் நிலையை அடைந்தது.

    இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி விதைப்பில் முழு ஈடுபாட்டுடன் விதை நிலக்கடலை கடந்தாண்டை காட்டிலும் விலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதை பொருட்படுத்தாமல் வாங்கி விதைத்தனர். இந்த நிலையில் மழையின்றி நிலக்கடலை பயிர் வாடி வதங்கியது. இதை பார்த்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக போச்சம்பள்ளி பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், நிலக்கடலை பயிரிடப்பட்ட பகுதிகளில் கருகும் நிலையில் இருந்த செடிகள் மீண்டும் உயிர் பெற்று செழித்து வளர்ந்து காணப்பட்டது. இதனால் நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

    வெள்ளகோவில்:

    முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற முன்வர வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    தமிழக விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் கோ.வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

    விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது. எனவே விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நிலக்கடலை சாகுபடியில் நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத் திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×