search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாற்று நாட்டு போராட்டம்"

    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
    • பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொங்கரம்பட்டு ஊராட்சிக்குபட்ட கனகதோப்பு கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கொங்கரம்பட்டு கனகதோப்பு சாலை பல ஆண்டுகளாக சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தனர்.

    க்ஷஆனால் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போது மாண்டஸ் புயலால் பெய்த கனமழை காரணமாக கொங்கரம்பட்டு கனகதோப்பு சாலை சேறும் சகிதமாக உள்ளதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் இன்று காலை சேறும் சகிதமாக உள்ள சாலையில் நாட்டு நடவு செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி மாணவர்கள் நாட்டுநடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×