search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு நலப்பணித் திட்டம்"

    • நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முகாமை பள்ளி நிர்வாகி அருள் அந்தோணி மிக்கேல் தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இடங்களில் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை தங்கராஜன் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை அமிர்த சிபியா, கடையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பள்ளி நிர்வாகி அருள் அந்தோணி மிக்கேல் தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மற்றும் ஊராட்சி செயலர் பாரத், லட்சுமியூர் ரவி, வார்டு உறுப்பினர் தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார். விழாவினை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்.

    • சிவகிரி சுற்றியுள்ள பகுதிகளில் ரத்ததான விழிப்புணர்வு முகாம் போன்ற பல்வேறு முகாம்களில் மாணவர்கள் ஈடுபட்டனர்,
    • நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

    தொடர்ந்து சிவகிரி மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உழவாரப்பணி, ரத்ததான விழிப்புணர்வு முகாம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முகாம், தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம், வழிகாட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாம், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல் ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். பள்ளியின் வளாகத்தில் நிறைவு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேனைத் தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத் தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் பாண்டி, கல்விக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பி னர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×