search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன சிகிச்சை"

    • பொன்ஜெஸ்லி மருத்துவமனை டாக்டர் சாதனை
    • நோயாளி கத்தியின்றி ஒரே நாளில் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டையுடன் பிறந்தார். இந்த ஓட்டையை இருதய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என பல சிறப்பு மருத்துவ வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சதீஷ்குமார் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மரு.சரவணனை சந்தித்து மருத்துவ ஆலோ சனை பெற்றார். அவர் உணவுக்குழாயில் காமிரா அனுப்பி துல்லிய இருதய படம் எடுக்கும் அதி நவீன கருவி மூலம் ஆராய்ந்து பார்த்து இந்த ஓட்டையை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம் என்று தெரி வித்தார். பிறகு காலில் உள்ள ரத்த குழாயில் சிறு துளையிட்டு அதன்மூலம் ஒரு சாதனம் பொருத்தி இருதய ஓட்டையை நவீன சிகிச்சை மூலம் அடைத்து சாதனை படைத்தார். நோயாளி கத்தியின்றி, ரத்தமின்ற ஒரே நாளில் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

    • மதுரை தேவகி மருத்துவமனையில் மாரடைப்புக்கு நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இந்த தகவலை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரீனஸ்டிமல் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ரீனஸ்டிமல் கூறியதாவது:-

    உலகளவில் மனிதர்கள் இறப்பதற்கு மாரடைப்பு (Heart Attack) முதன்மையான காரணமாக உள்ளது. ஒரு கா லத்தில் மாரடைப்பு என்பது (60) வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என்றிருந்தது, ஆனால் இன்று 20 வயதை கடந்த ஆண் பெண் இருபாலருக்கும் மாரடைப்பு என்பது தொடர்ந்து நடை பெறுகிற நிகழ்வாகி மரணத்திற்கு வழிவகிக்கிறது.

    மதுரை அரசரடி தேவகி சிறப்பு மருத்துவமனையில் இருதயநோய் பிரிவில் உலக தரம் வாய்ந்த அதிநவீன இருதய அறுவை சிகிச்சை பிரிவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட்டு வருகிறது.

    2 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், அதி தீவிர இருதய சிகிச்சை பிரிவு, புகழ்பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ரீனஸ் டிமல் M.S., M.Ch.,(CTVS), இருதய அறுவை சிகிச்சை மயக்கவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருபானந்த் M.D., D.M., (Cardiac Anesthetist) மற்றும் அனுபவம் வாய்ந்த தீவிர சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் சிறப்பு பயிற்சிபெற்ற குழுவை இத்துறை கொண்டுள்ளது.

    தேவகி சிறப்பு மருத்துவமனையில் உங்கள் இதயம் பாதுகாப்பான கைகளில் உள்ளது. மருத்துவமனையில் நீங்கள் சிகிச்சை பெறும் ஒவ்வொருநாளும் நீங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் உணர செய்யப்படுவீர்கள், உங்கள் ஆரோக்கியத்திற்கான தீர்வு, உயர்தரமான சிகிச்சை பெற்று, விரைவாக குணமடைந்து மகிழ்ச்சியுடன், இல்லத்திற்கு செல்லலாம் .

    தேவகி சிறப்பு மருத்துவமனையில் கீழ் காணும் இருதய அறுவை சிகிச்சைகளால் நீங்கள் பயனடையலாம், பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை(CABG), வால்வு மாற்று அறுவை சிகிச்சை(AVR /MVR/DVR/TVR), வால்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை(Valve Repair Surgeries), Aortic Surgeries, இரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்புகளுக்கான அறுவை சிகிச்சை(Embolectomy), நுரையீரல் அறுவை சிகிச்சை(Lung / Lobectomy / Decortication), சிறுத்துளை / நுண்துளை இருதய அறுவை சிகிச்சை(MICS). பிறவி இருதய கோளாறு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் (Congenital Heart Disease (CHD) - ASD Closure / VSD Closure / TOF/ Etc). இவை மட்டுமல்லாம் அவசரகால இருதய அறுவை சிகிச்சை(Emergency CABG, Ventricular Septal Rupture, Free Wall Rupture, Cardiac Tamponade, Acute Mitral Regurgitation, Aortic Dissection, Acute Limb Ischemia) போன்ற நோய்களுக்கு 24 x 7 சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.

    இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளையும், சிகிச்சையும் அளிக்க எங்களிடம் 24 x 7 மருத்துவ அவசர ஊர்தி (Ambulance), ரத்த பரிசோதனை ஆய்வகம், ECG, ECHO, TMT, ஆஞ்சியோகிராம் பரிசோதனை (Angiogram), ரத்தநாள அடைப்பிற்கு 'ஸ்டென்ட்' (Angioplasty) சிகிச்சை, இருதய வால்வு சுருக்கத்திற்கு பலூன் சிகிச்சை, பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை, இருதய துவாரங்களை கருவி கொண்டு மூடும் சிகிச்சை மற்றும் கேத்லேப் வசதிகள் உள்ளன.

    ஏழை எளிய மக்கள் பயன்பெரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை, தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், இ.எஸ்.ஐ. பயனாளிகள், பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் மற்றும் அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பயனாளிகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×