search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவ கைலாயம்"

    • அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • பயண கட்டண தொகை நபர் ஒன்றுக்கு ரூ.600 ஆகும்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நெல்லை மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ் சேவை இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 31-ந் தேதி, ஜனவரி 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய 5 நாட்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய கோவில்களுக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சேவை பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு நவ கைலாய பஸ்கள் மேற்கண்ட 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6.30 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய இடங்களில் உள்ள நவ கைலாய கோவில்களுக்கு சென்று இரவுக்குள் நெல்லை வந்து சேரும்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இச்சேவை சிறப்பு பஸ்களுக்கு வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஜனவரி 13-ந் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பயண கட்டண தொகை நபர் ஒன்றுக்கு ரூ.600 ஆகும். இந்த சிறப்பு நவகைலாய பஸ் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டணமாக ஒரு நபருக்கு நெல்லையில் இருந்து ரூ.300-ம், சங்கரன்கோவிலில் இருந்து ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது.
    • நவகைலாய கோவில்களுக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    நெல்லை:

    மகா சிவராத்திரி மற்றும் மகா பிரதோஷத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை கோட்டம் சார்பில் வரும் 18-ந் தேதி மகா சிவராத்திரி மற்றும் மகா பிரதோஷத்தையொட்டி நெல்லை மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து இரவு 8 மணிக்கு பஞ்ச பூத தலங்களான தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திரும்பி வரும் வகையில் நெல்லை புதிய பஸ்நிலையம், சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கட்டணமாக ஒரு நபருக்கு நெல்லையில் இருந்து ரூ.300-ம், சங்கரன்கோவிலில் இருந்து ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் 18-ந் தேதி அன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு நவ கைலாயங்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நவகைலாய கோவில்களுக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக சங்கரன்கோவில் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையங்களில் இன்று (10-ந் தேதி) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×