search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லூரில்"

    • பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதி
    • சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நல்லூர் பகுதியில் ரோட்டில் உள்ள பாலம் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பாலப்பணிகள் தொடங்கப் பட்டதையடுத்து சுசீந்தி ரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு சென்ற பஸ்கள் அனைத்தும் வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக மருங்கூருக்கு இயக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பொது மக்கள் இருசக்கர வாக னங்களில் மற்றும் ஆட்டோக் களை செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக் கப்பட்டு இருந்தது. தற்காலிக பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் சென்று வந்தனர்.

    பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக தற்காலிகமாக அமைக்கப் பட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருங்கூரிலிருந்து சுசீந்திரத்திற்கு பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மருங்கூரிலிருந்து மயிலாடி, வழக்கம்பாறை வழியாக சுசீந்திரத்திற்கு வந்தனர். தற்காலிக பாலம் சேதமடைந் துள்ளதையடுத்து அந்த பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து தடை பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி தற்பொழுது நடைபெற்று வரும் பாலப்பணியை துரிதமாக முடித்து பஸ் போக்கு வரத்தை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் சேதம் அடைந்த தற்காலிக பாலத்தை உடனடி யாக சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறி னார்கள். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகா ரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×