என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகைகள்"

    • இந்தாண்டு பல நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர்.
    • இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்

    2025 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களுக்கு மகழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் இந்த வருடம் புதிய வெளிச்சம் பெற்றது.

    பல நடிகர், நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர். இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விதமும் அதற்கு ரசிகர்கள் பொழிந்த வாழ்த்து மழையும் இணையத்தை ஆக்கிரமித்தன.

    அவ்வகையில் 2025-இல் குழந்தை பெற்ற இந்திய திரை பிரபலர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    1. சினேகன் - கன்னிகா:

    தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

    பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இந்தாண்டு துவக்கத்தில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு காதல் கவிதை என நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டினார். 

    2. பிரேம்ஜி:

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு இந்தாண்டு இறுதியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துனர். தனது 47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    3. விஷ்ணு விஷால்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இந்தாண்டு துவக்கத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டினார். 

     4. மாதம்பட்டி ரங்கராஜ்... ஜாய் கிரிசில்டா

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் அப்பா நான் தான் என்று ஒப்புக்கொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ், DNA பரிசோதனை தயார் என்று தெரிவித்துள்ளார். 

    5. விக்கி கவுசல் - கத்ரீனா கைப்

    பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதியில் அவர்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

    6. கியாரா அத்வானி

    பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் நடிப்பில் இந்தாண்டு கேம்சேஞ்சர், வார் 2 படங்கள் வெளியாகின.

    கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.

    இதையடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்தாண்டு இறுதியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.


    7. பரினீதி சோப்ரா

    பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.

     8. ராஜ்குமார் ராவ்

    பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், 2021 ஆம் ஆண்டு பத்ரா லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இந்தாண்டு ராஜ்குமார் ராவ் - பத்ரா லேகா தம்பதிக்கு இந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதி தங்களது 4 ஆம் ஆண்டு திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

    • திரை பிரபலங்களின் விவாகரத்து இந்தாண்டு இணையத்தில் பேசுபொருளனது
    • ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்தனர்.

    இந்த 2025 ஆம் ஆண்டில் திரையுலக பிரபலங்களின் திருமணங்கள் மட்டுமல்ல, சில ஜோடிகள் தங்கள் வாழ்க்கைத் துணையை பிரிந்து சென்றதும் சமூக ஊடகங்களில் மற்றும் செய்தித்தாள்களில் கவனம் பெற்றது. இவைகள் ரசிகர்களிடம் பேசுபொருளாகின.

    அவ்வகையில் இந்தாண்டு விவாகரத்து பெற்ற திரை பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்

    1. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி

    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

    2. மீரா வாசுதேவன்

    பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுது.

    மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார். தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

    இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார்.

    தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார். ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்தாண்டு தனது மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்தார் .

    3. ஜெசிகா ஆல்பா

    பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெசிகா ஆல்பா இந்தாண்டு தனது கணவர் கேஷ் வாரனை விவாகரத்து செய்தார். 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியின் விவாகரத்து பெரும் பேசுபொருளானது. 

     

     4. ஜெனிபர் லோபஸ் - பென் அப்லெக்

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்

    ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை மணந்திருந்தார்.

    • திரை பிரபலங்கள் இந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர்.
    • இந்த வருடத்தை, ரசிகர்கள் "ஸ்டார் வெட்டிங்ஸ்" ஆண்டாகவே கொண்டாடியுள்ளனர்.

    2025ஆம் ஆண்டு திரையுலகம் முழுவதும் திருமணச் சந்தோஷத்தில் மலர்ந்த வருடமாக அமைந்தது. தமிழ் சினிமாவை சேர்ந்த திரை பிரபலங்கள் இந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர். சினிமா ரசிகர்கள் பெரிதும் நேசிக்கும் நடிகர்கள், பாடகர்கள் மற்றும் ரியாலிட்டி ஸ்டார்கள் வரை—பலரும் இந்தாண்டு மணமக்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

    பிரபலங்களின் காதல் கதைகள் திருமண மேடையில் நிறைவு பெற்ற இந்த வருடத்தை, ரசிகர்கள் "ஸ்டார் வெட்டிங்ஸ்" ஆண்டாகவே கொண்டாடியுள்ளனர். இவ்வாண்டு திருமணம் செய்து கொண்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்பதை தொகுத்து பார்ப்போம்.

    1.சாக்ஷி அகர்வால்:

    மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

    இந்தாண்டு தொடக்கத்தில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் நடைப்பெற்றது. குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை சாக்ஷி தற்போது காதலித்து கரம்பிடித்தார். கோவாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

    2. 'தெருக்குரல்' அறிவு:

    தமிழ் சினிமாவின் முன்னணி ராப் பாடகர்களுள் ஒருவர் அறிவு. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான எஞ்சாய் என்சாமி என்ற பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். 

    இந்தாண்டு தொடக்கத்தில் தெருக்குரல் அறிவு அவரது நீண்ட நாள் காதலியான கல்ப்பனாவை இன்று கரம் பிடித்தார். இத்திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக தொல்.திருமாவளவன் மற்றும் இளையராஜா கலந்துக் கொண்டனர். 

     3. கிஷன் தாஸ்:

    முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் அறிமுகமான கிஷன் தான் அவரது நீண்ட நாள் காதலியான சுச்சிதிரா குமாரை இந்தாண்டு துவக்கத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. 

    4. பார்வதி நாயர்:

    மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகை பார்வதி நாயருக்கும், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். 

    5. டி.வி. தொகுப்பாளினி பிரியங்கா

    பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.

    இந்நிலையில், இந்தாண்டு வசி என்பவரை பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.

    6. அபிநயா

    நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா.

    நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனான கார்த்திகை இந்தாடினு திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அபிநயா அவரது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    7. லியோ ஹம்சவிர்தன்

    'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

    லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.

    8. 'பசங்க' ஸ்ரீராம்

    பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம் . இவர் அதற்கு அடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதற்கு பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் கடைசியாக மணிரத்னம் உருவாக்கிய நவரசா இணைய தொடரில் நடித்து இருந்தார்.

    ஸ்ரீராம் தற்பொழுது ஒரு பயோ டெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நீண்ட நாள் காதலியான நிகில் பிரியாவை இந்தாண்டு திருமணம் செய்தார். 

    9. மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா

    மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.

    அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக தான்.

    இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக பேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டா புகைப்படம் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.

    10. TTF வாசன் திருமணம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், டி.டி.எப் வாசன் 5 வருடமாக காதலித்து வந்த தனது மாமன் மகளை திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    11. சமந்தா

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படத்தில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டனர். ஈஷா யோகா மையத்தில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தாண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் சமந்தாவின் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
    • மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

    இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை படங்களின் வசூலை தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள்? என்ற விவரத்தை வைத்தும் மதிப்பிடப்படுகிறார்கள்.

    அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    இதில் ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் என நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

     ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள்.

    இந்த பட்டியலில் சமந்தா 13-ம் இடத்திலும், தமன்னா 16-ம் இடத்திலும், நயன்தாரா 18-வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29-ம் இடமும், தனுஷ் 30-ம் இடமும் பிடித்து இருக்கின்றனர். மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. 

    நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் புது ஆடை, வகையான சாப்பாடு, புது ரிலீஸ் திரைப்படங்களை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் மலையாள நடிகைகள் அவர்களது ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    நடிகைகளின் ஓணம் க்ளிக்ஸ்-ஐ இப்பதிவில் பார்க்கலாம் வாங்க:

    கேரளா நடிகை பாவனா அழகான அனார்கலி உடையில் ஜொலிக்கிறார்.

    மாளவிகா மோகனன் அழகிய ட்ரான்ஸ்பரண்ட் Saree ஓணம் க்ளிக்

    கௌரி கிஷனின் மகிழ்ச்சியான ஓணம் க்ளிக்

     

    ஓவியாவில் ஓணம் செல்ஃபி

    ரம்யா நம்பீசனின் சிம்பிள் ஓணம் க்ளிக்

     

    நடிகை அனுமோலின் தங்க நிற புடவையில் ஓணம் க்ளிக்,அபர்னா தாஸின் ஓணம் க்ளிக்,சம்யுக்தாவின் கேஷுவல் ஓணம் க்ளிக் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
    • ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.


    கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


    கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

    ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.

    இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

     அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18  கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.

     நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

    • மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
    • சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வி.டி.எம்.சார்லி - ஏ.அந்தோணியம்மாள் தம்பதியின் இளைய மகன் எம்.அஜய் தங்கசாமிக்கும், எம்.ஜான் கென்னடி - எல்.அனிட்டா அலெக்ஸ் தம்பதியின் மகள் ஜே.பெர்மீசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    இதில் நடிகர்கள் சிவகுமார், செந்தில், எஸ்.வி.சேகர், அழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இதையடுத்து திருமண விருந்து நிகழ்ச்சி சாந்தோம் கச்சேரி சாலையில் உள்ள பாஸ்டரல் சென்டர் ஹாலில் நடந்தது. சார்லியின் மூத்த மகன் எம்.ஆதித்யா சார்லி - எஸ்.எழில் அம்ரிதா, பேத்தி ஏ.ரேயா புஷ்பம் சார்லி உள்ளிட்டோர் விருந்தினர்களை வரவேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து எம்.அஜய் தங்கசாமி - ஜே.பெர்மீசியா டெமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நியூஸ்-7 டி.வி. மேலாண்மை இயக்குனர் வி.சுப்பிரமணியன், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, நாசர், விஜயகுமார், சின்னி ஜெயந்த், நடிகைகள் சச்சு, சுகன்யா, விஜி சந்திரசேகர், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன், விஜய், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிடு நடராஜன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    • கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.
    • இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல், இசை, நாடக கலைஞர், திரைப்பட நடிகர், பாடகர் என்று பன்முகங் களை கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டி.ஆர்.எம்.சுகுமார் பவனத் தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    இன்று காலை பிரபல பின்னணி பாடகி பி. சுசிலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணி யன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம் மார்பளவு சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட்டு மூத்த வக்கீல் டி.கே.கோபாலன் தலைமை தாங்கினார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம் பரம், தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் நடிகர் ராஜேஷ், நகைச்சுவை நடிகர் செந்தில், நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதி, நடிகை சச்சு, நடிகர் அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டி.ஆர்.மகாலிங்கம் பேரன் டி.ஆர்.எம்.எஸ்.ராஜேஷ் மகாலிங்கம், டி.ஆர்.வித்யா ஆகியோர் வரவேற்றனர். மாலை தென்கரையில் அமைந்துள்ள டி.ஆர்.மகாலிங்கம் நினைவு கலையரங்கில் பிரபல பின்னணி பாடகர் பங்குபெறும் டி.ஆர்.எம்.எஸ். சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    இதைத்தொடர்ந்து வெண்ணிறை ஆடை நிர்மலா செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாட லுக்கு நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.வி.கருப்பையா, ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் பங்களா மூர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், தென்கரை தி.மு.க. கிளை செயலாளர் சோழன் ராஜா மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், இசை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது.
    • நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    யோகா என்பது நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. மனம் மற்றும் இடத்தை ஒருசேர ஒருங்கிணைக்க அறிவியல் பூர்வமாக இயற்கையின் வழி நின்று உதவும் ஒரே கருவி யோகாதான். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடிகைகள் ரகுல் பிரீத்சிங், அபிராமி, சம்யுக்தாஷான் ஆகியோர் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
    • வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

    தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.

    இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கேரள திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
    • நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட 17 நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலத்தில் ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கேரள திரைப்பட அகாடமியின் தலைவரும், இயக்குனருமான ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

    கவர்ச்சி நடிகை மினு, நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு, முகேஷ் எம்.எல்.ஏ., மணியன் பிள்ளை ராஜு ஆகிய 4 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். மலையாள சினிமாவில் பட வாய்ப்புக்காக தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நடிகைகள் தெரிவித்து வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் நிர்வாகிகள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்ததை அடுத்து, தார்மீக பொறுப்பேற்று அதன் தலைவரும், நடிகருமான மோகன்லால் உள்பட 17 நிர்வாகிகள் தங்களது பதவியை நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதோடு செயற்குழுவும் கலைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க உறுப்பினர்களும், நடிகைகளுமான சரயு, அனன்யா ஆகியோர் நிர்வாகிகள் ராஜினாமா மற்றும் செயற்குழுவை கலைத்த முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தான் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர். எனவே, நாங்கள் ராஜினாமா செய்யவில்லை என்று கூறினர்.

    இதேபோல் நடிகர்கள் வினு மோகன், டோவினோ தாமஸ், ஜெகதீஷ் ஆகியோர் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ததில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர்.

    இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×