என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நகை அடகு கடையில் கொள்ளை
நீங்கள் தேடியது "நகை அடகு கடையில் கொள்ளை"
மணப்பாறை நகை அடகு கடையில் கொள்ளை போன சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்த 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
மணப்பாறை:
மணப்பாறை அருகே உள்ள சாலைகரை பொய்கை பட்டியில் ஒரு நகை அடகு கடை உள்ளது. இந்த கடையில் கடந்த நவம்பர் மாதம் பூட்டை உடைத்து நகை கொள்ளை போனது. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந் நிலையில் மணப்பாறை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மருங்காபுரி அருகே உள்ள பாலப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (31) என்பதும் அவர்தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடகு கடையில் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. அவர் இதுபோல் வேறு எங்கும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் சுரேசின் கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X