என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளி குத்திக்கொலை. தண்டவாளம்"
கோவை:
கோவை சிங்கா நல்லூர்-இருகூர் இடையே உள்ள இந்திரா நகர் என்ற பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிங்காநல்லூர் மற்றும் கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும் என தெரிந்தது. மேலும் அவர் லுங்கி, சர்ட்டுஅணிந்து காணப்பட்டார். தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததால் அவர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் இறந்தாரா? என்று விசாரணை நடத்தினர்.
ஆனால் அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. ஆனால் வயிற்றில் மட்டும் ஒரு கத்திக்குத்து இருந்தது. எனவே அவரை யாரோ சிலர் கொலை செய்து, ரெயில் மோதி இறந்து விட்டது போல் நாடக மாட உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது.
பின்னர் போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த அய்யப்பன் (45) என்பதும், இவர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகரில் அறை எடுத்து தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
எனவே வேலை முடிந்து இவர் தனது நண்பர்களுடன் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட் டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்ட அய்யப்பனுடன் வேலை பார்த்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. அய்யப்பன் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் கோவைக்கு வந்ததும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்