search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொங்குபாலம்"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும்.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர் குறிச்சி அருகே உள்ள உதயகிரி கோட்டையினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கன்னியாகுமரி கடற்கரை, லெமூரியா கடற்கரை, பூம்புகார் படகுதளம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிகிறார்கள்.

    சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன்வரைவு திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உதயகிரி கோட்டையினை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    உதயகிரி கோட்டை வளாகத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகள் ரூ.13 லட்சம் மதிப்பில் வளாகத்திலுள்ள குளத்தினை தூர்வாரும் பணியினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு இப் பணிகளை விரைந்து முடித்திட பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து படைத்தளபதி டிலனாய் கல்லறையினை பார்வையிடப்பட்டது.உதயகிரி கோட்டை வளாகத்தினை தூய்மைப்படுத்து வது, தொங்குபாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தினை வகுத்திட வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. வளாகத்திலுள்ள மீன் அருங்காட்சியகத்தினை மேம்படுத்துவது அதிகமான விலங்குகள், பறவைகளை இங்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும் வனத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமையலறை கூடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இச்சமையலறை பயன்பாட் டிற்கு வரும்போது பத்மநாபபுரம் நகராட்சி விலவூர் திருவிதாங்கோடு, இரணியல், வில்லுக்குறி ஆகிய நான்கு பேரூராட்சிக்குட்பட்ட 20 பள்ளிகளை சேர்ந்த சுமார் 1900 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×