search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொங்கு பாலம்"

    • வியாபாரிகள் பாதிக்காத வகையில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • நாகர்கோவில் நகர பகுதியில் தினமும் 110 டன் குப்பைகள் பெறப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், துணை மேயர் மேரிபிரின்சிலதா, மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், கவுன்சிலர்கள் மீனாதேவ், அக் ஷயா கண்ணன், அய்யப்பன், உதயகுமார், ரமேஷ், அனிலா சுகுமாரன், வளர்மதி, டி.ஆர்.செல்வம், நவீன்குமார், கலா ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    வடசேரி பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதால் தற்பொழுது உள்ள வடசேரி சந்தையில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். வியாபாரிகள் பாதிக்காத வகையில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. குப்பை கிடங்கை உடனடியாக மாற்ற வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 51-வது வார்டுக்குட் பட்ட புல்லுவிளை, மேலகாட்டு விளை பகுதியில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வரி போடுவது பெயர் மாற்றுவது தொடர்பாக பொதுமக்கள், கவுன்சிலர்கள் மனு அளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதில்லை. புரோக்கர்கள் மூலமாக வந்தால் உடனடியாக பெயர் மாற்றங்கள் வரி போடுவது போன்ற பணிகள் நடக்கின்றன. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு பெயர் மாற்றத்திற்கு கொடுத்த மனுக்கள் கூட நிலுவையில் உள்ளது. செட்டிகுளம் பகுதியில் உடனடி யாக ரவுண்டானா அமைக்க வேண்டும். தெருவிளக்குகளுக்கு பல்புகள் தட்டுப்பாடு உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு சிவன் கோவில் முன்புள்ள பழைய ஆற்றில் இருந்து நாகராஜா கோவில் அழகம்மன்கோவில் உட்பட முக்கியமான கோவில்களுக்கு புனித நீர் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். தற்பொழுது இரட்டை ெரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த புனித நீரை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்று வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதற்கு மேயர் மகேஷ் பதிலளித்து கூறியதாவது:-

    வடசேரியில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வியாபா ரிகள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். அந்தப்பகுதியில் சாலைகள் விரிவாக்கம் செய் யப்படும். வடசேரி சந்தையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து வடசேரி பஸ் நிலையத்திற்கு தொங்கு பாலம் அமைப்பது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே வடசேரி பஸ்நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் தினமும் 110 டன் குப்பைகள் பெறப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநக ராட்சியில் 4 மண்டல அலுவ லகங்கள் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய் யப்பட்டுள்ளது. தற்பொழுது மண்டலத்தின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மையப்பகுதியில் மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கான இடம் ஒதுக்கீடு செய்து கட்டிடங்கள் அமைப்பதற்கு நிதி பெறப்பட்ட பிறகே மண்டல அலுவலகங்கள் திறக்க முடியும். மண்டலங்கள் தற்பொழுது திறக்கப்பட்ட பிறகு வரும் காலங் களில் மண்டலத்தின் மையப்பகுதி யில் புதிய கட்டிடங்கள் அமைத்து மண்டல அலுவலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் நகர பகுதியில் தண்ணீர் பிரச்சினை சமாளிப்பதற்கு பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இயற்கை நமக்கு கை கொடுக்கும் வகையில் மழையும் பெய்து வருகிறது. தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். வரி போடுவது, பெயர் மாற்றம் தொடர்பாக அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கையை எடுக்க ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்வார். செட்டிகுளம் பகுதியில் ரவுண்டான அமைப் பது தொடர்பாக ஏற்கனவே 2 முறை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்துள்ளோம். நெடுஞ்சா லைத்துறை அதிகாரி யிடம் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. ரவுண்டானா விரைவில் அமைக்கப்படும். அந்த பகுதியில் ரவுண்டானா அமைக்கப் படும்போது செட்டிகுளத்தில் இருந்து சவேரியார் கோவில் செல்லும் சாலை இருவழி பாதையாக மாற்றப்படும். தெருவிளக்குகளை பராமரிக்க ரூ.16 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒழுகினசேரி பழைய ஆற்றின் அருகே உள்ள சிவன் கோவில் முன்பு இருந்து புனித நீர் எடுத்துச் செல்வதற்கு மாற்று வசதி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா பயணிகள் கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
    • 450 மீட்டர் நீளமும், 120 மீட்டர் உயரமும் கொண்ட தொங்கு பாலம் அமைக்கபடுகிறது.

    ஊட்டி,

    சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை, பைக்காரா படகு இல்லம் மற்றும் பைக்காரா நீர் வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

    கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். பல்வேறு சாகச விளையாட்டுக்கள் அடங்கிய கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    சுற்றுலாத்துறையும் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்கவும், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் சாகச விளையாட்டுக்களை சுற்றுலா தலங்களில் கொண்டு வருவதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. இதன் ஒருபகுதியாக படகு இல்லத்தில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்லும் வகையில் 450 மீட்டர் நீளமும், 120 மீட்டர் உயரமும் கொண்ட தொங்கு பாலம் அமைக்கபடுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஒரு மாத காலத்தில் முடியும் என எதிர்பார்க்கபடுகிறது.

    இந்த பணிகள் முடிந்து இந்த தொங்கு பாலம் திறக்கபட்டால் அது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும். இதன் மேல் இருந்து படகு இல்லத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.

    ×