search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் திருவிழா"

    • பொது தேர்தல் போன்று மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
    • ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.

    மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமை நிர்ணயம் செய்யவும் தேர்தல் மற்றும் ஓட்டுரிமை பற்றி மாணவிகள் தனது பள்ளி பருவத்திலேயே தெரிந்து கொள்ளவும் விழிப்புணர்வுக்கான தேர்தல் திருவிழா மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியின் மாணவியர் தலைவி மற்றும் வகுப்பு தலைவியை தேர்ந்தெடுக்கும் விழாவிற்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தங்கினார். தலைமை ஆசிரியர் ஜெகஜோதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைவிக்கு பிளஸ்-2, மாணவிகள் 6 பேரும், வகுப்பு தலைவிக்கு அந்தந்த வகுப்பு மாணவிகளும் போட்டியிட்டனர்.

    இதற்காக கடந்த மாதம் 30ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். 3, 4, 5 தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தனர். இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பொது தேர்தல் போன்று மாணவிகள் வரிசை யில் நின்று வாக்களித்தனர். ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. ஓட்டு போட்டவர்கள் கையில் மை வைக்கப்பட்டது.

    பின்னர் அவை அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேர்தல் திருவிழாவில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

    ×