search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Festival"

    • பொது தேர்தல் போன்று மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
    • ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.

    மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமை நிர்ணயம் செய்யவும் தேர்தல் மற்றும் ஓட்டுரிமை பற்றி மாணவிகள் தனது பள்ளி பருவத்திலேயே தெரிந்து கொள்ளவும் விழிப்புணர்வுக்கான தேர்தல் திருவிழா மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியின் மாணவியர் தலைவி மற்றும் வகுப்பு தலைவியை தேர்ந்தெடுக்கும் விழாவிற்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தங்கினார். தலைமை ஆசிரியர் ஜெகஜோதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைவிக்கு பிளஸ்-2, மாணவிகள் 6 பேரும், வகுப்பு தலைவிக்கு அந்தந்த வகுப்பு மாணவிகளும் போட்டியிட்டனர்.

    இதற்காக கடந்த மாதம் 30ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். 3, 4, 5 தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தனர். இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பொது தேர்தல் போன்று மாணவிகள் வரிசை யில் நின்று வாக்களித்தனர். ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. ஓட்டு போட்டவர்கள் கையில் மை வைக்கப்பட்டது.

    பின்னர் அவை அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேர்தல் திருவிழாவில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

    • விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 27ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது.
    • இன்று மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 27ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 27-ந் தேதி விநாயகர் பூஜையும், 28-ந் தேதி சுவாமி பூத சிம்ம வாகனத்திலும், 29-ந் தேதி நந்தி காமதேனு வாகன த்திலும், 30-ந் தேதி சேஷ வாகனத்திலும், 31-ந் தேதி ரிஷப வாகனத்திலும் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று (1-ந் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று காலை சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இன்று மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தொடர்ந்து தேர் பெருமாள் கோவில் வீதி, கடைவீதி வழியாக வந்து நிலை சேருகிறது.

    நாளை பாரிவேட்டை, குதிரை கிளி வாகன காட்சியும், 4-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும், 5-ந் தேதி புஷ்ப விமானத்தில் சாமி உலா வருதலும், 6-ந்தேதி மஞ்சள் நீர் உற்சவ விழாவும் நடக்கிறது.

    • பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
    • குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கோபி, 

    கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 30-ந் தேதி காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடி மரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற்றது.

    காலை 9மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்றுமாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

    இதை யொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை கோயில் அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.

    நாளை 6-ந் தேதி தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம்வருதல்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வானை உடன் சண்முக பெருமான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ×