என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பங்குனி உத்திர தேர்த்திருவிழா
- பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
- குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோபி,
கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 30-ந் தேதி காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடி மரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற்றது.
காலை 9மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்றுமாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.
இதை யொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை கோயில் அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.
நாளை 6-ந் தேதி தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம்வருதல்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வானை உடன் சண்முக பெருமான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்