search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கருத்தரங்கம்"

    • உயிரி எரிபொருள் பற்றிய அறிவைப் பொழிந்து, மாணவர்கள் தங்கள் திட்டங்களுக்கான காப்புரிமையை பதிவு செய்ய ஊக்குவித்தார்.
    • தடுப்பூசி தயாரிப்பு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

     ஓசூர்,

    ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பத் துறை சார்பில் ",உயிரி தொழில்நுட்பவியலின் எதிர்காலப்போக்குகள் மற்றும் உயிரி மருத்துவ தொழில்களில் அதன் பயன்பாடு' என்ற தலைப்பில், 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    அதியமான் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கி, கரோனா நிலைமை மற்றும் அந்த காலகட்டத்தில் உயிரி தொழில்நுட் பவியலாளர்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

    இறுதி ஆண்டு மாணவர் பரத் மாநாட்டில் துறையின் ஆண்டு செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட, பெங்களூரு, விப்ரோ அறிவியல் ஆய்வகங்களின் தலைவர், சையத் சல்மான் லத்தீப், ஆய்வக செயல்முறைகள் மற்றும் அவர்களின் ஆய்வகங்களில் வழங்கப்படும் இன்டர்ன்ஷிப் சலுகைகள் குறித்து விளக்கி பேசினார்.

    கவுரவ விருந்தினராக, பெங்களூரு சின்ஜின் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன துணை மேலாளர் ஜெயந்திரன், ஆய்வக சூழல் மற்றும் பல்வேறு ஆய்வக உபகரணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குன்னூர் பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா ஆராய்ச்சி அதிகாரி, ஜெகநாதன், தடுப்பூசி தயாரிப்பு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    மாநாட்டின் இரண்டாவது நாளில், அழைக்கப்பட்ட முன்னாள் மாணவியும், பெங்களூரு, ஆன்தம் பயோசயின்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளருமான திவ்யா சூரியபிரகாஷ், கல்லூரி நாட்களில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் டாக்டர் ரெங்கநாதன், உயிரி எரிபொருள் பற்றிய அறிவைப் பொழிந்து, மாணவர்கள் தங்கள் திட்டங்களுக்கான காப்புரிமையை பதிவு செய்ய ஊக்குவித்தார்.

    கல்வி மற்றும் விளை யாட்டு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர் குருமூர்த்தி (இயற்கை விவசாயம், வேளாண்மைப் பயிற்சியாளர்) மண்புழு உரம், உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் வறண்ட நிலத்தை பயிரிடுவதற்கு வளமான நிலமாக மாற்றுவது குறித்து விவாதித்தார்.

    துறை இணை பேராசிரியர் டாக்டர். சரண்யா மற்றும் உதவி பேராசிரியர்கள் கவிதா, நான்சி சில்வியா, கிறிஸ்டினா, மணி ஸ்ரீதர் ஆகியோர் மாநாட்டை ஒருங்கிணைத்தனர். முடிவில், மாணவர் ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷிதா நன்றி கூறினார்.

    • ராமசாமி ராஜா பாலிடெக்னிக்கில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
    • ஏற்பாடுகளை மின்னியல் பேராசிரியர் வேல்முருகன், மெக்கானிக்கல் துறைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம், இந்திய பொறியாளர்கள் அமைப்பு இணைந்து பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்தியது. இதில் 25 பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்று கட்டுரையை சமர்ப்பித்தனர். ெதாடக்க விழாவில் பி.ஏ.சி.ஆர். கல்வி அறக்கட்டளை தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ், முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். நிறைவு விழாவில் மதுரை பிரிவு பொறியாளர்கள் அமைப்பை சேர்ந்த ராஜயோகன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

    சிவில் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, மெக்கானிக்கல் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு விருதுநகர் வி.எஸ்.வின் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு மீனாட்சியாபுரம் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மாணவ-மாணவிகள் பெற்றனர். விழா ஏற்பாடுகளை மின்னியல் பேராசிரியர் வேல்முருகன், மெக்கானிக்கல் துறைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை ஆட்சி மன்ற குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

    ×