search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெளிப்பான்"

    • அலுவலகத்தில் விசை தெளிப்பான், தார் பாய் உள்ளிட்ட வேளாண் பொருட்களை வாங்கி வைத்திருந்தார்.
    • அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கோட்டப்பூண்டி கிராமத்தில் நெல் உற்பத்தியாளர் குழு அலுவலகம் உள்ளது. இக்குழுவின் தலைவராக செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா இருந்து வருகிறார்.

    இந்த அலுவலகத்தில் விசை தெளிப்பான், தார் பாய் உள்ளிட்ட வேளாண் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். சம்பவத்தன்று மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிலிருந்த வேளாண் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் எனக்கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×