search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sprinkler"

    • அலுவலகத்தில் விசை தெளிப்பான், தார் பாய் உள்ளிட்ட வேளாண் பொருட்களை வாங்கி வைத்திருந்தார்.
    • அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கோட்டப்பூண்டி கிராமத்தில் நெல் உற்பத்தியாளர் குழு அலுவலகம் உள்ளது. இக்குழுவின் தலைவராக செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா இருந்து வருகிறார்.

    இந்த அலுவலகத்தில் விசை தெளிப்பான், தார் பாய் உள்ளிட்ட வேளாண் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். சம்பவத்தன்று மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிலிருந்த வேளாண் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் எனக்கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப் பட்டு ள்ளது.
    • வால்பாறையில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் வால்பாறையில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது.

    30-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட் களில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப் பட்டு ள்ளது.

    இது தவிர சிறிய அளவில் காப்பி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப் பட்டுள்ளன.

    வால்பாறையை படும் சுற்றி உள்ள எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை த்தூள் கோவை, கொச்சி, குன்னூர்போன்ற ஏல மையங்கள் மூலம் வெளிநா டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் பருவ மழைக்கு பின்னர் வால்பாறையில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.

    இரவு முதல் காலை வரை பனிப்பொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. தொடரு ம் இந்த காலநிலை மாற்றத்தால், தேயிலை செடிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் துளிர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, ஸ்பிரிங்லர் மூலம் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்து தேயிலை மகசூலை அதிகரிக்கும் பணியில் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளனர். 

    ×