search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கத்திருவிழா"

    • கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்தி திருவிழா நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்தி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தூக்கத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்ப டுகிறது. மாலை 3 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் எழுந்தருள்வார்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது, பின்னர் தூக்கத்திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச் சிக்கு கோவில் தலைவர் ராம சந்திரன் நாயர் தலைமை தாங்குகிறார். கேரள கவ ர்னர் ஆரிப் முகம்மது கான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றுகிறார். கன்னியாகுமரி தொகுதி எம். பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம். எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நமஸ்காரம் 19-ந்தேதி காலையில் தூக்க நேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக் கிறது. அன்று இரவு 9மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடைபெறும். 21-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் பண்பாட்டு மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கிவைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப், கேரள முன்னாள் சுகாதார துறை மந்திரி சிவகுமார், நடி கர் கரமனை சுதீர், நாகர்கோவில் இந்து கல்லூரி செயலாள ரும், தாளாளருமான நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    23-ந்தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது.

    தூக்க நேர்ச்சை 25-ந் தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர் களின் முட்டுகுத்தி நமஸ்கா ரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைக ளுக்கு தூக்க நேர்ச்சை நிறை வேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்தி ரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செய லாளர் பிஜூ குமார். துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனி வாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×