search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு"

    • கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மறவன் குட்டை பகுதியில் சாலையோரம் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருப்பதாகவும்,

    அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வெங்கடாஜலபதி மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் உள்பட பலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. மேலும் அந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    யாரையோ கொலை செய்து உடலை மூட்டையில் கட்டி வீசி சென்றதாகவும் தகவல் பரவியது.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த அந்த மூட்டையை மேலே எடுத்து கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் இறந்த நாயின் உடல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நாயை அங்கேயே அருகில் குழி தோண்டி புதைத்தனர்.

    இதனால் போலீசார் நிம்மதி அடைந்த னர். போலீசாரின் விசார ணையில் இறந்த நாயை யாரோ சிலர் மூட்டை கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    ×