search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமதி உலக அழகி போட்டி"

    • திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும்.
    • 70-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி (வயது45). இவர் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடை பெறும் திருமதி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் அவர் கலந்து கொள்ளஉள்ளார்.

    ஏசியா பசிபிக் என்ற பட்டத்தை வென்ற பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருமதி உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் இளநிலை பட்டமாக லைப் சயின்ஸ், முதுநிலை பட்டமாக எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் அண்ட் எச்.ஆர், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.ஏ. ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட படிப்புகள் படித்து உள்ளார்.

    இதுதொடர்பாக பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருவொற்றியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும். இதில் 70-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    உடற்தகுதிச் சுற்று, தனிநபர் நேர்காணல் சுற்று, ஈவினிங் கவுன் சுற்று என்று மூன்று விதமாக நடைபெறும். உடற் தகுதிச் சுற்று, உடல் பராமரிப்பு, தன்னம்பிக்கை, மனதிடம் ஆகிய சுற்றுகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு 25 சதவீத மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக தனிநபர் நேர்காணல் சுற்று நடக்கும். இதில் 5 நடுவர்கள் இருப்பர். 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 5 நிமிடங்களுக்குள் நாம் பதில் சொல்ல வேண்டும்.

    இதற்கு 50 சதவீத மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக ஈவினிங் கவுன் சுற்று எனப்படும் ஆடை அலங்காரச் சுற்று. இதில் பெண்கள் தங்களுடைய கணவருடன் பங்கேற்க வேண்டும். இது ஒரு கணவன் பெண்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை காட்டும் சுற்று ஆகும்.

    மேற்படி சுற்றுக்களில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் 16 பேரும் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தச் சமூக பிரச்சினைகள் பற்றியும், அதை மாற்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் நாம் 30 நொடிகள் பேச வேண்டும்.

    பிறகு அவர்கள் அதில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். அந்தக் கேள்விகளுக்கு 30 நொடிகளில் நாம் பதில் சொல்ல வேண்டும். நான் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி உரிமை ஆகிய சமூக பிரச்சினைகளை தேர்ந்தெடுத்து பேச உள்ளேன். இந்த சுற்றின் இறுதியில் 5 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இறுதி போட்டிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் திருமதி உலக அழகி போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • தமிழகத்தில் இருந்து திருமதி உலக அழகிப்போட்டியில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது

    சென்னை:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் ஹேமமாலினி ரஜினிகாந்த். இவர் சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். ஹேமமாலினி கடந்த ஆண்டு நடந்த திருமதி தெற்காசிய அழகி பட்டத்தையும், 2021-ம் ஆண்டு நடந்த திருமதி பிரபஞ்ச இந்திய அழகி போட்டியில் 2-ம் இடத்தையும் பிடித்தார்.

    2022-ம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப்போட்டி பல்கேரியாவில் 30-ந்தேதி (நாளை மறுதினம்) நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில் டாக்டர் ஹேமமாலிலினி பங்கேற்க உள்ளார்.

    இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் டாக்டர் ஹேமமாலினி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் திருமதி உலக அழகி போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான் பங்கேற்க உள்ளேன். இந்த போட்டியில் 110 நாடுகளில் இருந்து 120 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். அழகி என்றாலே வெளிதோற்றை மட்டுமே பார்க்கிறார்கள்.

    ஆனால் உள்ளே இருக்கும் அழகான எண்ணங்கள் தான் முக்கியம். திருமணமாகிய பின்பு வாழ்க்கை முடிந்து விட்டதாக சிலர் கருதுகிறார்கள். திருமணத்துக்கு பின்னர் தாம் வாழ்க்கையே தொடங்குகின்றது. கடினமான உழைப்பு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். அதனால் நிச்சயமாக வெற்றிப்பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தருவேன்.

    தமிழகத்தில் இருந்து திருமதி உலக அழகிப்போட்டியில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. இன்னும் நிறைய திருமதிகள் இதுபோன்ற உலக அழகி போட்டிகளில் பங்கேற்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதற்கு முன்பு நான் பட்டங்களை வெல்வதற்கு எனது குடும்பத்தினர் நல்ல ஆதரவினை தந்தார்கள். அதுபோன்று இப்போதும் தங்களது ஆதரவினை வழங்கியிருக்கிறார்கள். நிச்சயமாக நான் பட்டம் வெல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×