search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் ஆகாத ஏக்கத்தில்"

    • மணிகண்டன் அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு ராமன் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி ரேனுகா. இவர்களது மகன் மணி கண்டன் (30). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    இதனால் மணிகண்டன் மன வேதனையில் இருந்து வந்தார் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக வும், இதனால் அவர் தின மும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று காலை மணிகண்ட னின பெற்றோர் வேலை க்கு சென்று விட்டனர். அவர்கள் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர், அப்போது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்தது.

    இதையடுத்து அவர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன் அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×