search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி"

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவரை திருமணம் செய்த வாலிபர் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந் தேதி இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்துக்காக சேர்ந்தார்.

    மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் தாயின் வயதை ஆய்வு செய்த போது அவர் 14 வயதே ஆன சிறுமி என்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் டாக்டர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக குழந்தைகள் நல அமைப்பினர் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தாய் அவரது தந்தைக்கு தெரியாமல் 22 வயதான இளைஞர் ஒருவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தை பிறந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமி, குழந்தை மற்றும் அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோரை மாவட்ட சமூக நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் சமூக நல கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.

    நீதிபதி விசாரணை நடத்திய பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்ட வட மாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஆயிரம் பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் அங்கு வந்தார்.

    அவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். ஆஸ்பத்திரிக்கு வந்த ஆண்களின் சட்டையை பிடித்து இழுத்து கிழித்தார். பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்கதாக கூறப்படுகிறது.

    மேலும் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்சுகளை அடிக்க பாய்ந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். அவர்களது கையில் சிக்காமல் அங்குமிங்கும் ஓடினார்.

    பின்னர் பொதுமக்கள், ஆஸ்பத்திரி காவலாளிகள் அவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து திமிற தொடங்கினார். அவரது கை, கால்களை கட்டி தர்ம அடி கொடுத்தனர்.

    இதில் அவரது கண், வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விசாரித்த போது இந்தியில் பேசினார். இதனால் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    அவர் தனது பெயரை மாறி, மாறி கூறி வருகிறார். சிகிச்சை முடிந்து வெளியே வந்தால் தான் அவரிடம் விசாரணை நடத்தி முழு விவரங்களை பெற முடியும். அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×